17,ஏப்ரல்,2011 இராசசுத்தான் மாநிலத்தில், தவுசா மாவட்டத்தில்,
மூன்று தனியார் மருத்துவமனையில், சென்ற ஆண்டில் மட்டும்(மார்ச்- செப்டம்பர்,2010), 385 பெண் நோயாளிகள் மருத்துவத்திற்காக சேர்ந்ததில்,
226 மகளிர் கருப்பைகள், அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன.
உருவா 12000 முதல் 14000 வரை இதன் மூலம் அறுவை சிகிச்சை கட்டணமாக வசூலிக்கப் பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், "அகில பாரதிய கிரகக் பஞ்சாயத்து", என்ற தொண்டு நிறுவனம் சேகரித்த செய்தியாகும்.
இச் செய்தியை வாசித்தவுடன் தோன்றிய உணர்வுகள், ஒரு கவிதையாக,
கருவறையும் கூட
கழித்துக் கட்டப்படும்
சில்லறைக்காக.....
சிகிச்சையில்
மனிதம் மறந்த
மருத்துவம்!
No comments:
Post a Comment