Tuesday, May 1, 2007

மலேசியாவில் வதை...

வீட்டு வேலை, காட்டு வேலை,
இழிந்த வேலை,
எங்களுக்கு இல்லை.


இருக்கின்றான் இந்தியன்,
அவனில் இளைச்சவன்,
இளிச்ச வாயன் தமிழன்.


அட்டை கடி,
தொற்று நோய்,
அடிதடிக்கு பணிவாய்,
எசமான விசுவாசம்,


ஆங்கிலேயரோ,
எவரோ,
கண்காணியாய்,
கண்ணியம் இழந்து,
மண் இழந்து,
கடந்த கால வரலாறாய்,


வீட்டிற்குள் பூட்டி வைத்து,
வதை,
கண் ஒளி இழந்து,
உடல் நலிவுற்று,
வெறும் கூடாய்,
ஆவி பிரிவதற்குள்,


பழி வராமல், காட்டிற்குள்,
வீசினார் தமிழரை,
குப்பையை வீசுவது போல்,
போனது,
தமிழன் உயிர் மட்டும்,
அல்ல,
தமிழ்நாட்டின் சுயமும்,
மரியாதையும்.

No comments: