வேலிக் காத்தானை பிடிங்கிட்டோம்!
வேற பயிர் செய்திட்டோம்!
கரம்பா எதையும் வைக்க மாட்டோம்!
காலி மனையும் விடமாட்டோம்!
வீட்டுமனை வேணும்னா,
உம் வீட்டை அதிலே கட்டு!
மனை வியாபாரம் இங்கு வேண்டாம்!
மண் வாசனை போகவேண்டாம்!
உழவு ஓட்டுவோம்! எழவை விரட்டுவோம்!
எண்ணி எண்ணி நாள்தோறும்,
ஏங்கி, இனி வாழ மாட்டோம்!
ஏரிக்கரையில் உள்ளவரே!
குளத்தங்கரையில் உள்ளவரே!
ஆற்றங்கரை கிராமம்,
அடக்கு முறையிலும்,
ஒடுக்கு முறையிலும்,
அறிந்த பாடம்,
அறிவிக்கும் பாடம்,
புரிந்து கொண்டு போராடு!
பூமி உனது, போராடு!
No comments:
Post a Comment