Thursday, July 12, 2007

வாராது வந்த...

நேற்றும்,இன்றும் மழை. இடி,மின்னல். வழக்கத்திற்கு மாறான சுழல் காற்று. கனமழை. 'பணமழை பெய்யும்' மாநிலத்தில். தென்மேற்கு பருவ மழையா? இருப்பினும், ' கால் சேர்' மழை கூட இருக்காது. அம்மாவின் கணிப்பு.

'அங்குல அளவில்' வாழும் நம்க்கு, அந்த 'அளவை', மறைந்த வரலாறு. வெப்பம் தணிந்ததா? ஓரளவிற்கு. 'அச்சார உடன்படிக்கை'யாக கொள்ளலாமா. ஆசை அதிகம் மனிதனுக்கு. பெருமழை வேண்டுமாம்! பார்க்கலாம், அடுத்த வடகிழக்கு மழையின் போது.

உங்கள் 'வேள்வி' வினையாகுமா?

No comments: