Sunday, July 15, 2007

குட்டிச்சுவர்

அந்த நாட்களில் இருட்டியதும், கழிப்பு செய்திடும் இடம். விசாலமான மனை. இந்த தெருவிற்கும் அந்த தெருவிற்கும், பாதையுடன் கூடியது. இரண்டு பக்கங்களிலும் வீடுகள் அரணாக ,பூசணிக்கொடிகள் மனித உரங்களில் படர்ந்து இருக்க. பூசணி பூக்களின் வாசத்தில், பொழுது புலர்ந்தால், சாயுங்காலம் ஆனால், அந்த தெருவிலுள்ளவர்களின் இயற்கை அழைப்பிற்கு இடம் கொடுத்து வந்தது, வெகுகாலமாக. கூட்டம் கூட்டமாக 'வேதனையை தீர்த்த' வரலாறு. மறைந்த செய்தி.


அதற்கு அடுத்த தனுசுப் பிள்ளைத்தோட்டம், தென்னம் பிள்ளைகள் அடர்ந்த இடம். 'கழிப்பிடமாகவும்', 'பொழிப்பிடமாகவும்', பல தலை முறையினருக்கு பயன்பட்டு வந்தது. அதில் ஒரு பகுதியில், அனைத்து சாதியினரும், வேறுபாடு இல்லாமல் உதை பந்து, கிட்டிப் புல், 'லாக்', கைபந்து, சடுகுடு, பம்பரம், கோலிக்குண்டு விளையாட்டு, போன்ற பல விளயாட்டுகளில் நண்பர்களாக, சகோதரர்களாக பொழுது போக்கிய இடம், மாறியுள்ளது.


அந்தப் பகுதியில் காலங் காலமாக வாழ்ந்த மக்களுக்கு, பட்டா போட்டு கொடுத்த இடம், தற்பொழுது 'ஆனந்த இன்னாக', 'திருமண நிலையமாக', 'சற்குரு ஓட்டலாக' உருமாற்றம். எவ்வாறு?


பாலத்தின் கழிவு வாய்க்கால் மீது, கட்டிடம் கட்டும் அளவிற்கு, அரசு நிலத்தின் மீது மீறல், பட்டா செய்து கொடுத்த நிலத்தை கைப்பற்றி, வணிக நிறுவனங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இம்மாற்றங்கள், விளைந்த ஏமாற்றங்கள் எவருக்கு பலன் விளவித்தது?

1 comment:

ஜெகதீசன் said...

எங்கள் ஊரிலும் இதே நிலை தான்.