Tuesday, October 28, 2008

தார்குண்டேவை நினைவு கூர்வோம்! பகுதி - 2

டேராடூனை விட்டு, தில்லிக்கு சென்ற சமயத்தில், 'மறுமலர்ச்சி நிறுவன அமைப்பு' விழாவில், அவரை நான் சந்தித்தேன். இச் சமயத்தில், ஒரு சிலர் அவரிடம், நான் கட்சி அரசியலில் ஈடுபட்டதாக கூறிய போது, தார்குண்டே அவர்கள் சிரித்துக் கொண்டே, நான் 50% விழுக்காடு அவர்கள் பக்கம் உள்ளதாக கூறினார்.

எங்கள் நட்பு, நெருக்கடி நிலை நாட்டில் நடைமுறையில் இருந்த போது, மேலும் வளர்ந்தது. சிறையில் அடைக்கப்பட்டவர்களின் மனித உரிமைகள் குறித்து, அவரின் உறுதியான அச்சமற்ற நடவடிக்கைகள், சனநாயகவாதிகள் மத்தியில், அவரை ஒரு தலைவராக வெளிப்படுத்தியது.

இக் காலக்கட்டத்தில் தோன்றியதுதான், 'மக்கள் சிவில் உரிமை மற்றும் சனநாயக உரிமைக் கழகம்' ஆகும். நாங்கள் ஒன்றுபட்டு உழைத்தோம். கடந்த கால எமது தொடர்புகள் மட்டுமின்றி, செயபிரகாசு நாராயணன் மற்றும் எசு.எம்.சோசி அவர்களுடன் ஆன நெருங்கிய தொடர்பும், எங்கள் பிணைப்பிற்கு காரணமாக அமைந்தது.

No comments: