Saturday, October 4, 2008

வெறி!

ஒரிசாவை மையம்
கொண்ட வெறி!
எங்களூரில்!
பெங்களூரில்!

கூறுகிறார்!
மதமாற்றம்
எதிர்த்து!

பரவுகிறது தீ!
பெரும்பான்மை
உணர்வு!

விரும்பிய மார்க்கம்!
எம் உரிமை!
திரும்பிய நோக்கம்!
உம் வறுமை!

சமணம், புத்தம்,
பார்சி, இசுலாம்,
பழங்குடி மார்க்கம்!

அனைத்தும்,
அரசியல் சட்டம்!
எமக்களித்துள்ள
உரிமை!

உம்மை நான்
இழுக்கவில்லை!
எம்மையும் நீ
இழுக்காதே!

ஏற்காத
இந்துத்துவா!
ஒழியாத வர்ணம்!
அழியாத சாதியம்!

பழியாக
நாம் கூற
ஏற்குமா ?
பெரும்பான்மை!

உணவில்லை!
தண்ணீர் இல்லை!
உழைப்பும் உரிமை
இல்லை!

நிலம் இல்லை!
களம் இல்லை!
நிழலுக்கும்
பொசுப்பில்லை!


நம்பிக்கை அளிக்கும்
மார்க்கம்!
எம் விருப்பம்!
உரிமை!

உணர்வுடன்
இணைந்தோம்!
உருக்குலைக்க
நீ யார்?

No comments: