Sunday, February 18, 2007

ஓர் அனுபவம்..

நடுத்தரவர்க்கத்தினர் மத்தியில் செயல்படும் தொழிற்சங்கங்கள், பெரும்பாலும் அவர்களது குறுகிய நலன்களுக்காகவே பாடுபடுகின்றன.குறிப்பாக, இடதுசாரி முத்திரையுடன் செயல்படும் தொழிற்சங்கங்கள் செயல்பாடும்,பல்வேறு கட்சி அரசியல் உணர்வு உள்ளவர்களை தலைமைப்பொறுப்பில்இருத்தி,வர்க்க உணர்வு முழக்கங்களை எழுப்பி நடை போடுவது தன் முரண்பாடாகவும் கேலியாகவும் உள்ளது.ஊழல் குற்றச்சாட்டுக்கள்,அவதூறு பிரச்சாரங்கள் ஆகியவற்றை அணிகள் முன் வைத்து திரட்டும் போலியான அணுகுமுறைகள், நிறுவனத்தை கேலிக்குள்ளாக்குகிறது. கையாடல் செய்வது, கையூட்டுபெறுவது போன்ற முறைகேடுகளில் தேர்ந்தவர்களாக உள்ள 'தோழர்கள்' நிர்வாகத்தின் மீதும், அடுத்த தொழிற்சங்கத்தின் மீதும் அவதூறுகளை அள்ளி வீசுவது எவ்விதத்தில் சரியானது என்றால் பதில் இல்லை..

'எதுவுமே ஒழுங்கில்லை ஒழுங்கைப்பற்றி பேசுகிறீர்கள்'என்று தலைமைப்பொறுப்பில் உள்ளவர்கள் பேசுவது வேடிக்கையாக உள்ளது. இக்கூற்று, இவர்களுக்கும் பொருந்துவது அறியாதது போல், அடாவடியாக ஆர்ப்பரிப்பது, 'பணி நேரத்தில் பாரி விளையாடுவது' பணி கலாச்சாரமாக கொள்ள இயலுமா?
தலைமையிடம் இவர்கள் கற்றுக்கொண்டது என்ன?.

குறிப்பாக,சாதிய உணர்வுகளை சாடுகின்ற இவர்கள், ஒரு வட்டத்துக்குள் இருந்து கொண்டு, 'நெல்லிக்காய் மூட்டைகளாக சிதறும்' ஒடுக்கப்படும் பெரும்பான்மை சாதி மக்களை, மிகவும் நுணுக்கமாக, தைரியமாக ஏமாற்றி பிழைப்பு நடத்தி வருகின்ற்னர். இந்நுட்பத்தை புரிந்து கொள்ள இயலாது, சுதேசி அடிமைகளாக பல்லாண்டு காலமாக இத்தொழிலாளர்கள், விறகு கட்டைகளாக தங்களை இழந்து கொண்டிருக்கிறார்கள்.

விடியல் இவர்களுக்கு
எப்போது?

No comments: