Saturday, February 24, 2007

புதுச்சேரி அரசின் மக்கள் விரோத திட்டங்கள்..!

  • தேங்காய்த்திட்டு மக்களை ஊரைவிட்டே காலியாக்கும் ஆழ்கடல் துறைமுக திட்டத்தை கைவிடு!

  • துணை நகரம் பெயரில், 700 ஏக்கர் விளைநிலத்தை கையகப்படுத்தும் திட்டத்தை நிறுத்து!

  • சுண்ணாம்பாற்று கரையில், அலுத்தவேலியில், 5 நட்சத்திர ஓட்டல் கட்ட, பொழுதுபோக்கு பூங்கா அமைக்க, 100ஏக்கர் பசுமையான நிலம் அழிக்கப்பட்டு பாலைவனம் போல் காட்சி அளிக்கும் நிலைமையை உடனே நிறுத்து!

  • வீராம்பட்டிணம் கடற்கரையில், கடலோரக் காவல் படைத் தலைமையகம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 25ஏக்கர் நிலம் கையகப்படுத்தி. மீனவ மக்களின் வாழ்விடத்தைப் பறிக்கும் காவல் படை விரிவாக்கத்தை, உடனே நிறுத்து!


    மேற்காணும் கோரிக்கைகளை வலியுறுத்தி, 19.02.2007 அன்று பெரியார் சிலை அருகில், சமூக இயக்கங்கள், செயல் பாட்டாளர்கள் பங்கு கொண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தாராளமயம், தனியார்மயம், உலகமயம் ஆகிய மக்கள் விரோத அரசு கொள்கை தாக்கத்தின் காரணமாக, புதுவையின் மிகவும் பிற்படுத்தப்பட்ட, பெரும்பான்மைச் சமூக மக்கள் பிரிவினரான, வன்னியர்கள், மீனவர்கள், தங்களின் வாழ்வாதாரங்களை இழந்து அந்நியமாக்கப்படுகின்றனர்.

    இவர்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் திட்டங்கள், எவரின் வளர்ச்சி! முன்னேற்றத்திற்கு!

    அரசே, தரகராக, பன்னாட்டு முதாலாளிகளுக்கு முகவராக செயல்படும் போக்குகளை எதிர்த்து மக்கள் அரசியலை முன்னெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்!

    அணி திரள்வோம்! ஆர்ப்பரிப்போம்!! அம்பலப்படுத்துவோம்!!

No comments: