Sunday, February 22, 2015

(2011 அக்டோபர் மாத ஒரு மழைக்கால இரவின் அனுபவம்.ஏட்டில் இருந்தது. இன்று ஏற்றம் பெற்றது)

இடி, மின்னல், போர்க்களம் போல். நள்ளிரவு கடந்தும் மழையின் இழையாக ஓயாது முழக்கம். மனிதர்களே! உங்களால்தான் இயலுமா! தீபாவளி மாதம் உங்களுக்கு மட்டுமா!

நீங்கள் வெடிப்பது செயற்கை வெடி, எம் வெடி, வேடிக்கை இயற்கை! இடைவிடாத மழையுடன் இன்னல் தீர்க்க துரோகம் இல்லை! துயரம் இல்லை! எம்மிடம் பேதம் இல்லை,

செய்கை நியாயப் படுத்தும் வேதம் இல்லை, வெறுப்பு அரசியலும் கை வசம் இல்லை!அனைவரும் சமம் எம் ஆட்சியில், மண் வளம் சேர்த்திடும் எம் வெடி! மனிதர் நலம் கெடுத்திடும் உம் வெடி! ஒரு சாரரை உயர்த்திடும் வணிக வெடி!
உடன் இருந்தே கொல்லும், உருக்குலைத்திடும்.

கடன் சுமந்த மக்கள் கண்ணீரில், காலந்தோறும் கிடங்கியில்,வண்ணக் கனவுகளை அடுத்தவர் அனுபவிக்க, எண்ண கனவுகள் இமைகளை த் தாண்டியும் தாண்டாமல், ஏங்கிய வலியுடன் உள்ள வாழ்க்கை.பொங்கும் உணர்வே பட்டாசாக, பொசுப்பு இதுவே என்றாகி போக்கிடும் இயல் வாழ்க்கை.

எக்கிடும் சாதிக்காரர் எசமான உயரத்தில், ஏற்றுமதியில். எக்காள மொழி ஏழைக்கென்றாகி!

No comments: