Friday, May 25, 2018

தூத்துக்குடியில்....




அடிக்கல் நாட்டினாய்!
அடுத்தவன் அழிவென்று
விரட்டியதை,
அரவணைத்தாய்!

ஆரம்பித்து வைத்தாய்!
அழிவை ஆசிர்வதித்தாய்!
ஆளுமை செய்தாய்,
நன்கொடை நிரந்தரம் ஆக்கினாய்,
நாசத்திற்கு துணை போனாய்.

பாதிப்பில்,
பதறிய மக்கள்,
பழுதடைந்த உடலொடு,
சில பத்தாண்டுகள் பரிதவித்து
திகைத்தனர், திண்டாடினர்.

தீர்வளிக்கும் ஆட்சி என
நம்பினர்!
நம்பிக்கை மோசம்,
நாடக வேடம்
நாளெல்லாம்,
உள்ளும் வெளியும்!

சுகம் சேர்த்தாய் சொந்தங்களுக்கு!
வழியின்றி வாழ்வாதாரத்திற்கு
வகையின்றி,
சிறுகச் சிறுக நலம் கெட்டவர்,
சிதறியிருந்தவர்,
சீர்தூக்கி,
செறிவாக முன்னெடுத்த,
இழப்பதற்கு ஒன்றும் இல்லை
சூழல் உரிமை,
அரசியல் களம்!

தீவிரம் அடைந்தபோது, திகைப்புற்ற
கையூட்டு அரசியல்,
கை நழுவுகிறதே
கதறல்!
பெருவணிக நன்றி மறவா
பாய்ச்சல்!

மக்கள் மீது மேய்ந்தாய்!
ஆலை சார்பாய்!
அரியணை சார்பாய்
ஆவி பறித்தாய்!

கூற்றும் அஞ்சும் கொடுமை கூட்டினாய்!
கோலோச்சும் கேள் பகை,
தூத்துக்குடியில்...........



No comments: