Thursday, November 15, 2007

பந்த்- சட்ட விரோதம் இல்லை-1

இரசேந்திர சச்சார்- மக்கள் சிவில் உரிமைக் கழகம்

1997 ல் கேரள உயர் நீதி மன்றம் பந்த் அழைப்பை தடை செய்தது. உச்ச நீதி மன்றம் 1998 ல் இதனை உறுதி செய்தது. தொடர்ந்து தொழிற் சங்கங்கள், அரசியல் செயல் வீரர்கள் மத்தியில், அடிப்படை உரிமைகளான பேச்சு உரிமை, சங்கம் வைக்கும் உரிமைக்கு எதிரான தீர்ப்பு என எதிர்ப்பு அலை, வெறுப்புணர்ச்சி ஆகியவற்றை உண்டாக்கியது.

பந்த் அழைப்பை விடுத்தவர்கள், எந்த ஒரு குடி மகனையும் வேலைக்கு செல்வதையோ நேரிடையாகவோ, மறைமுகமாகவோ தடுக்கவில்லை என்றாலும், குடி மக்கள் மனதில் ஒரு அச்ச உணர்வை ஏற்படுத்தக் கூடும். அதன் காரணமாக, அவரின் அடிப்படை உரிமைகள் பாதிக்கக் கூடும் என்ற வலுவான காரணத்தை அது முன் வைத்தது. இக்கருத்து கரக் சிங் வழக்கில் அய்ந்து நீதிபதிகள் அளித்த தீர்ப்புக்கு முரணாக அமைந்தது.

நீதி மன்றமும் 'அர்த்தால்'(உருது சொல்) அல்லது பொது வேலை நிறுத்தம் குறிக்கும் (செனரல் ஸ்ட்ரெய்க்) தடை செய்யவில்லை. அரசியல் கட்சியினர் அதனை தொடர்ந்து பந்த் என்று அழைக்காமல், பல போராட்ட முறைகளை கைக்கொண்டனர்.

தமிழ் நாடு அரசு அண்மையில், அமைதியான 'பந்த்' நடத்த அழைப்பு விடுக்கும் வரை, இதில் பிரச்னை அதிகம் இல்லாது இருந்தது. 2003ல் உச்ச நீதி மன்றம், வழக்குரைஞர்கள் வேலை நிறுத்தம் செய்திட உரிமை இல்லை அல்லது வழக்கு மன்ற புறக்கணிப்பு செய்திட உரிமை இல்லை என்று அறிவித்தது.

என்றாலும், நீதி மன்றத்தின் கண்ணியம், சுயேச்சைத் தன்மை, நலன்கள் குறித்த பிரச்சனையில் ஒரு நாளுக்கு மேற்படாத வேலை புறக்கணிப்பை நீதி மன்றம் கண்டு கொள்ளாது என்று கூறியது.


அமைதியான முறையில் எதிர்ப்பு ஊர்வலம், தர்ணா போராட்டம், தொடர் உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களை, நீதி மன்ற வளாகத்திற்கு வெளியில், வழக்குரைஞர்கள் நடத்தலாம் என்று தீர்ப்பு அளித்தது.

இந்திய வழக்குரைஞர்கள் மற்றும் மாநில வழக்குரைஞர்கள் சங்கங்களும், நீதி மன்ற சீர்திருத்தம் தொடர்பாக, இந்திய அரசு காலந் தாழ்த்தி வருவது தொடர்பாக, ஒரு குறிப்பிட்ட நாளில், தலை நகர் தில்லியில்,
அமைதியான எதிர்ப்பு போராட்டம் நடத்தப்படுகிறது என்றால், அது சமயம் வழக்குரைஞர்களின் குடும்ப உறுப்பினர்கள், கட்சிக்காரர்கள்,
நல விரும்பிகள் ஆயிரக்கணக்கில் தெருவிலே இறங்கி ஆதரவு தெரிவிப்பார்கள் என்பதில் எனக்கு சற்றும் அய்யம் இல்லை.


வழக்குரைஞர்களால் தடையேதும் ஏற்படுத்தப் படவில்லை என்றாலும், தவிர்க்க முடியாத அளவில் காவல் துறையின் நிர்வாகத் திறமையின்மை, ஒட்டு மொத்த திறமையின்மை நிலையில், மறைமுகமாக ஏற்படும் பிரச்சனைக்கு, வழக்குரைஞர்களுக்கு தடை விதிக்கக்கூடாது.

சனநாயக உரிமை என்பது உறுதியான அர்த்தம் உள்ளதாகும். ஆங்கிலேய நீதி மன்றங்கள், அமைதியான போராட்டத்தில் கலந்து கொள்ளும் சிலரால் நிலைமைகள் மோசமானால் அதற்காக, எதிர்ப்புப் போராட்டம் ஏற்பாடு செய்பவர்களை பொறுப்பாக்க முடியாது, என உறுதியாக தீர்ப்பளித்துள்ளன.

எனவே, ஒரு மாநிலத்தின் ஆளும் கட்சி, பொதுமக்கள் நலன் கருதி, பலர் திட்டத்திற்கு எதிரானவர்களாக இருப்பினும், ஒரு திட்டத்தை உடனடியாக நிறைவேற்றக் கோரி விடுக்கும் 'பந்த்' சட்ட விரோதமானது என எவ்வாறு தீர்ப்பளிக்க முடியும்.

சுடுவர்ட் மில் இவ்வாறு கூறியுள்ளார்." மனித சமுதாயம் முழுமையும், ஒருவரைத் தவிர, ஒரு அபிப்பிராயத்தில் இருந்தால் ஒருவர் மட்டும் எதிரான கருத்தில் இருந்தால், அந்த ஒருவரின் குரலை அடைத்திட நியாயம் இல்லை, என்றாலும் அந்த ஒருவர் அதிகாரம் உடையவராக இருப்பின், மனித சமுதாயத்தின் குரலை அடைத்திட நியாயம் உடையவராகிறார்".

ஒரு அரசாங்கம் 'பந்த் அழைப்பு' விடுத்தால் அதை எதிர்த்திட வேண்டும். ஏனெனில் அரசு செயல்படாது இருந்திட முடியாது. அவ்வாறாயின், இதயம் செயல்படாது நிகழும் இறப்பிற்கு அது சமம்.

நடுநிலையான அனைத்து கட்சிகளின் வழியாக, எந்த ஒரு அதிகாரமும் பயன்படுத்தி, 'பந்த்' விருப்பமில்லாத குடிமக்கள் மீது திணித்து நடத்துவது சரியல்ல, என ஒரு நீதி மன்றம் வலியுறுத்துவதை என்னால் புரிந்து கொள்ள இயலும். தமது உத்தரவினால் பேருந்து இயக்கம் தடுப்பது, சட்டத்தால், உத்தரவால் கடைகளை மூடுவது, வியாபாரக் கடைகளை மூடுவது- வேலைகளை நிறுத்துவது, அரசியலமைப்பின்படி அனுமதிக்க முடியாதது ஆகும்.

No comments: