Tuesday, March 10, 2015

சுருண்ட சுதேசி



போபால் யூனியன் கார்பைடு
மித்தேல் ஐசோ சயனைடு
15000 இந்தியர் மரிப்பு

ஊடகக் கணக்கே
சரி என்றாலும்
உளவுத்துறை புகாரே
உண்மை என்றாலும்

26 ஆண்டுகள் இழுத்தடி
வழக்கு
நீதி மன்றம் அளித்த
தீர்ப்பு

8 பேருக்கு மேல் எட்டாத
இரண்டு வருட சிறை
உடனடி பிணையல்

பிணக் குவியல்
பணக் குவியல்
முன் தோற்றது

பாதிப்பின் விளைவில்
பகல் எது
இரா எது
என்று தெரியா
ஒளி இழந்த மாந்தர்
சந்ததிகளை இழந்த தாய்கள்

ஊனமுற்று
உடைந்து போன உள்ளங்கள்
உலகை விட்டு பிரிந்த
உயிர்கள்

யாவும் சொந்த நாட்டிலேயே
அன்னியரை விரட்டி அடித்த
அகிம்சை உடை தரித்த
பூமியிலே
சுருண்ட சுதேசி
உள்ளூர் வாசி

எங்காவது இப்படி உண்டா
ஏங்கிய இந்தியன்
தூங்கியவாறே
துடிப்பவர் யார்
நடிப்பவர் தேசத்தில்
அடிப்பவர் ஆட்சியில்

சட்டம்
தம் கடமை செய்யும்
உடமை உள்ளவர்
வீட்டு சேவகம்
நாட்டு சேவகம்

தொழிற்சாலை வேண்டும்
தொழிலாளர் எதற்கு
மண் வேண்டும்
மக்கள் எதற்கு

தொகை குறைந்தால் என்ன
GDP அதிகரிக்கும்
மூலதனம் குவியும்
மூளை இழந்தால்
என்ன
நாளை பார்க்கலாம்

No comments: