Friday, March 27, 2015

ஆர்த்திடும் வாகனங்கள் போட்டியில், அமைதியாக சிலருடன் நானும்

சாலையில் சந்தடிகளுக்கிடையில்,வந்தடி பதித்து வாகனத்தில் முன்னும்,

பின்னும் முந்தினேன்.


முச்சந்தியில் நிற்க வைத்திருந்த சிலை பக்கவாட்டில், சாலையின் ஓரத்தில்

சருகென சாய்க்கப்பட்ட மரம், உயிர் இழந்த சரீரம் போல் கிடத்தி வைக்கப் பட்டிருந்தது.

 கிருமி நாசினி, மங்கல வாசம் நீ! ஆலயந்தோறும் அலங்காரம் நீ! திரு வீட்டின்

திருப்பம் நீ! திருவிழாவின் திலகம் நீ!

உம்மை வீழ்த்தி, கீழே சாய்த்து,ஓரத்தில் கிடத்தி உம்மைப்  போன்றோர்

உயர்வுக்காக, வாழ்விற்காக, உயரத்தில் பதாகை எழுப்பி விழா கோலம்

பூணுவார், சடங்கு நாளில் சம்பிரதாய பவனியில், ஆண்டு தோறும்.

No comments: