Saturday, April 28, 2018

பதின்பருவ காதல்!

காதல் என்னும் கத்தரிக்காய்!

 அவர் இல்லாமல் நான் இல்லை! நான் இல்லாமல் அவர் இல்லை! இவ்வகை உணர்ச்சி தெரிப்புகள், அவசர கோலத்தில் , ஆசைவெளியில் கொட்டிடும் வார்த்தைகள்.இணைய தளத்தின் பழக்கம், இதய தளத்திற்கு செல்லாத சுணக்கம்.புற தோற்றம், ஒருவர் அக எழுச்சி, விருப்பம் ஆகிய தரவுக்குள் எடுக்கப்படும் முடிவுகள். பரிசீலனை செய்யப்படாத வைப்புகள்.

தனி மனித உரிமை, அதன் வீச்சு, அளவீடு, ஒருவொருக்கொருவர் எல்லைக்கோடு; அடுத்தவர் உரிமையை புரிந்து கொள்வது யாவும் தெளிவற்று பயணத்தில் இலக்கு. திருமண ஏற்பாடு. பெற்றோர்கள் பிள்ளைகளின் விருப்பத்திற்கு வலைந்து கொடுப்பது, பொருள் செலவழிப்பு, ஒரு சடங்காக, சம்பிராதயமாக போகிவிடும் சூழலும் ஏற்படுகிறது.

ஆரம்ப ஆர்வம், மதிப்பு, புரிதல் போக்குகள் எதிரெதிர் திசையில். புதிர்போட பொங்கிடும் ஆசை வலையத்திற்குள் சிக்கி, நிராசை நிகரம் தான் எனும் வணிக மனப்பாங்கு மேலோங்கும் சமூகப்போக்கில். கடவுள், சடங்கு, வழிபாடு யாவும் கடந்து சென்றிடும் பாதைக் கோடுகளாக நிற்கிறது.

உடல் சார்ந்து நிற்கும் பிரியம். அதனால் ஏற்படும் ஈர்ப்பு, பதின்பருவத்தின் நிகழ்வு.இது அகவியல் அடிப்படை.இவ்வுணர்ச்சி மேலோங்க, கட்டுகளை விட்டு விலகும் சூழல், புறநிலை போக்குகளால் உந்தித் தள்ளப்படுகிறது.

காட்சி ஊடகங்கள், கைபேசி முன்னேற்றங்கள் கணினி தொழில் நுட்பம் போன்றவை பெரிதும் தொடர் செல்வாக்கு செலுத்தும் நிலையில், நடைமுறை நாகரிகமாகவே இளைய சமுதாயத்தினரால் அங்கீகரிக்கப்பட்டு அமைந்து விடுகிறது.

வாழ்க்கை முறிவு, உறவு விரிசல், உடைந்த உள்ளம், இயல் நிகழ்வாகி நிலைமாற்றம் நீள்கிறது..........

No comments: