Saturday, April 28, 2018

நேப்பாள துயரம்!

சில ஆண்டுகளுக்கு முன் இமயமலைப் பகுதியை மையம் கொண்டு ஏற்பட்ட நில நடுக்கம், இமயமலை இருப்பையே சில மீட்டர் நகர்த்தியுள்ள இயற்கையின் சீற்றம், நாம் மறந்திருக்க இயலாது. அதன் விளைவாக நேரிட்ட நேப்பாள துயரம் குறித்து.

பேரழிவின் தொடக்கம்!
இமயமலை அடுக்கம்,
எதிர்கொள்ளும்
நடுக்கம்.

புவி அடுக்கின் முடுக்கம்
பொருதி வெளிப்படும்
அழுத்தம்.

பூமி அதிர்வின் வெளிச்சம்
புரியாத மனிதம்,
பொருமி வீழ்ந்திடும்
அவலம்.

அரசு அதிகாரம்,
 அலறியடிக்கும்
கலக்கம்,
ஆக்கினை செய்திட
ஆரம்ப முதலே,
 சுணக்கம்.

No comments: