Saturday, June 2, 2007

சுயம் இழந்து!

சாலைகளில் அலகு
இரு மருங்குகளிலும்
வரிசையாய்
திடீர் முளைப்பு!

'வள்ளுவர்', 'வல்லவர்',
'தமிழகம்', 'தளபதி',
'உயிர்', 'மூச்சு',
'குறள்,' 'ஓவியம்'
'குணக் குன்று'.

இரு வண்ணம்
இவர் எண்ணம்!

'ஏற்றும் தமிழர்'
'ஏற்ற தமிழர்'
ஏறுமாறாய்,
தாறுமாறாய் தமிழகம்.


வெகு காலமாய்,
உயர்வு நவிற்சியில்,
சுயம் இழந்து.

No comments: