Saturday, February 17, 2018

பேதம் இல்லை!




இயக்கவாதிகள் பெரும்பாலும் தற்புகழ்ச்சி, செருக்கு, தன்னதிகார மனப்பாங்கு மேலோங்கிட, வளைந்தும்,நெளிந்தும் வாழ்க்கையை செலுத்துகின்றனர். இதில் அவர், இவர் என்கின்ற பேதம் இல்லை!

 அவரவர் வேதமும் இதில் ஒன்றுதான்.அணிகள் வேறாயினும்,அம்சம் ஒன்றே! ஒத்திசைவில் இணக்கமாக அவரவர் சூழலில் ஆராவார கூட்டத்தினர் சூழ்ந்திட ஆளுமை!

இதில் சமூகம், மேம்பாடு யாவும் வாய்ப்பேச்சின் வகைகள்.தொகைகளுக்குள் மடங்கிவிடும் அமைப்புகளும்,முன்னோடிகளும் உண்டு.

உள்ளது அறிந்து ,உணர்வுடன் படிப்பினை பெற்று பயணிக்க வேண்டியுள்ளது. பாதைகள் பல கடந்த பின்னரும்,பயணம் புதிய சுவடுகளை பதித்து தொடர வேண்டியுள்ளது.

நெளிவும்,சுளிவும் நோக்கி அறிந்து, நோக்க உந்தம் பெற்று, போக்கு சீரமைத்து களைப்பாறி புறப்பட வேண்டியிருக்கிறது. புறப்பாடின் புலப்பாடு உள்வாங்கி, தெளிவுடன், தெம்புடன், தன்னுணர்வு,  தற்சார்பு அடைந்து!

No comments: