Tuesday, February 27, 2018

காவற்பெண்(டு)!



விழிக்க வைத்தாள்,
வீதியில் குக்கல்
வீர்ய ஒலிப்பில்.

அச்சம் அடர்ந்திட,
ஆள் அரவம்
நிழலாட.

தனியே துயிலும்
தாய்,
முதுமையின் அரவணைப்பில்.

தாழ் தளத்தில்,
தாழ்நீக்கி சென்றிட
தடுத்தாள்.

சாளரத்தில் விழிகள்
பொருத்தி,

நடுநிசி கரைந்திட,
துயில் தொலைத்து
சோர்ந்தாள்.

No comments: