புதன், சனிக்கிழமைகளில் எண்ணெய் தேய்க்கும் வேலை. தமக்கென உள்ள வாடிக்கையாளர் இல்லங்களுக்குச் சென்று தலைக்கு தேய்த்து பிழைக்க வேண்டியது.
காசுக்கடைத் தெருக்களில், விடிந்ததும் விடியாததுமாக பெருக்கி, துகள்கள் தேடுவது. இரவு நேரங்களில் கூட நகைக் கடைகள் சாத்திய பிறகு, கணவன் , மனைவி, பிள்ளை, பெற்றோர் என, ஒரு குடும்பமே குண்டு மணியைத் தேடும்.
இவர்களின் ஆய்வுக்கு சாக்கடையும் தப்பாது. சாக்கடை ஓட்டத்தை தடுத்து, பாத்திக்கட்டி, கழிவு நீரையும் சலித்துப் பார்க்கும் உழைப்பு. பரம்பரை, பரம்பரையாக, சலிப்பில்லாத வாழ்க்கை! காலங் காலமாக இத்தொழிலில் ஈடுபட்டு வந்தவர்களை, எங்கள் பக்கத்தில் 'வில்லி' என்றும் அழைப்பதை சிறு வயதில் நான் பார்த்திருக்கிறேன்.
அவர்கள் குன்னையர் தோட்டப்பகுதியில் வாழ்ந்ததை பார்த்துள்ளேன். அவர்கள் வயல் எலிகள் பிடிப்பதையும் ஒரு பழக்கமாக , தொழிலாகவும் செய்து வந்தனர்.
அவர்களைப் பற்றி சிறிய குறிப்பில், இவர்கள் வேட்டையாடத் தெரிந்தவர்கள் என்றும் , வில் பயன்படுத்தியவர்கள் என்பதும் தெரிய வந்தது. மேலும் இருளர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பதும் அறிய வருகிறது.
இவ்வளவு இருப்பினும், இவர்களை புதுவை அரசாங்கம் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கவில்லை. அவர்களுக்கு அங்கீகாரமும் இதுவரை மத்திய அரசிடமிருந்து வரவில்லை. தற்போது, மிகவு பிறபடுத்தப்பட்டவர்கள் சாதிப்பட்டியலில் மட்டும் இடம் பெற்றுள்ளனர்.
No comments:
Post a Comment