Sunday, September 2, 2007

குர்சார் இனப் போராட்டம்- 3

பண்டி மற்றும் பொன்லி கிராமங்களிலும் நிலைமை இவ்வாறே இருந்தது. அரசாங்கமே இது போன்ற அரசியல் , நிர்வாக குழப்பங்களுக்கு காரணம்.


1. மாநிலத்தில் தேர்தல் நடைபெற்ற சமயத்தில், மலைவாழ் மக்களின் பிரிவில் குர்சார் சமூகத்தையும் சேர்த்துக் கொள்வதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது .28, மே மாதத்திற்கு முன்பே நான்கு தேசிய நெடுஞ்சாலைகளில் மறியல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. போதிய கால அவகாசம் இருந்தது. அரசாங்கம் பேச்சு நடத்தி ஒரு தீர்வுக்கு முன்னேறி இருக்கலாம். அவ்வாறு இன்றி போராட்ட வீச்சும், வடிவமும் அரசாங்கத்தின் விருப்பமற்ற சூழலை, நமக்கு நன்கு புலப்படுத்தியுள்ளது.

2. ஆகசுடு, 2006ல், நட்வர்சிங்குக்கு ஆதரவாக நீண்ட தொலைவு, நெடுஞ்சாலையில் மறியல் நடத்த, அனுமதி கொடுத்துள்ள அரசாங்கம், தலை நகரத்திலே இசைவு அளித்தவர்கள், குர்சார் இனப் போராட்டத்திற்கு 144 தடை உத்தரவு போட்டதும், எவ்விலை கொடுத்தேனும் சாலை மறியலை தடுத்திடுவது எனும் முரண்பட்ட அணுகு முறை வெளிப்பட்டது.

No comments: