Saturday, September 22, 2007

கர்நாடகாவில் தொடரும் காவல்துறை மோதல் படுகொலைகள்!!

மக்கள் சிவில் உரிமைக் கழகம்-கர்நாடகா
***********************************************************
குதர்முக் தேசிய பூங்கா, மேற்கு தொடர்ச்சி மலையில் அமைப்பதை எதிர்த்து மக்கள் இயக்கம் உருவாகி எழுச்சியுடன் தொடர்ந்து போராடி வருகின்றது. சகெட் ராசன், முடுகேரி தாலுக்காவில் 2005ல், சிக்மகலூர் பகுதியில் மோதல் சாவில் கொலை செய்யப்பட்டதிலிருந்து, அரசுக்கும் நக்சல்பாரி இயக்கத்திற்கும் மோதல்கள் வலுத்து வருகின்றது. பசுமையான,அமைதியான இப்பகுதி, மோதல் களமாக மாறியுள்ளது.

அண்மையில், 10, சூலையில், மெனசினகத்யா கிராமத்தில் அரசுக்கும் நக்சல்பாரிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 5 கிராமவாசிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சுந்தரேசு குதிர்முக் தேசிய பூங்காவை எதிர்க்கும் அமைப்பின் பண்பாட்டுக் குழுவின் உறுப்பினர் ஆவார். வீதி நாடகங்கள் போன்ற பல விழிப்புணர்வு நடவடிக்கைகளில் மலைவாழ் ம்க்களிடம் தொடர்பு கொண்டிருந்தவர். பரமேசும் அவரது கூட்டாளிகளும் ராமேகவுடவின் வீட்டில் ஒளிந்திருந்தனர், 10ந் தேதி சூலையில் நடைபெற்ற காவல் துறை மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று காவல் துறை அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

ஆனால் மக்கள் சிவில் உரிமைக் கழகம், மற்றும் பிற முற்போக்கு குழுக்கள் நடத்திய ஆய்வில், நிகழ்த்தப்பட்ட மோதல், போலி மோதல், காவல் துறையின் அழித்தொழிப்பு நடவடிக்கையே, என கண்டறியப்பட்டுள்ளது.

இதில் கவுதம் மாவோய்சுடு இயக்கத்தைச் சேர்ந்தவர் என்பதும், மற்ற நால்வர் அப்பாவிகள் என்பதும், தேசிய பூங்கா அமைக்கப் படுவதை எதிர்த்து செயல்பட்டு வந்தவர்கள் என்பதும் தெளிவானது.

மேலும், நக்சல்பாரி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் எவரும் காவல் துறையினரை எதிர்த்து மோதலில் ஈடுபடவில்லை என்றும், அவர்கள் சரண் அடைய தயாராக இருக்கும் போதே சுட்டு வீழ்த்தப்பட்டனர் என்பதும் நிரூபணம் ஆகியது.

ரமேகவுடாவின் இரண்டு குழந்தைகளும் தற்போது அனாதையாகி நிற்கின்றனர். கர்நாடக அரசும், மோதல் சாவுகள் என, தன் பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறது.

இதேபோல், சிருங்கேரியில், அகும்பே எனும் பகுதியில் அரசு போக்குவரத்துக் கழகத்தின் பேருந்து ஒன்று கொளூத்தப் பட்டதாகவும் அதில் நக்சல்பாரிகளுக்கு சம்பந்தம் உள்ளது என்று கூறி. கேசவ் எக்டே என்பவர் வீட்டை நக்சல்பாரிகள் தீ வைத்து விட்டனர் என்றும் கூறி, காவல் துறை கடும் ஒடுக்கு முறையில் ஈடுபட்டுள்ளது.

அப்பகுதியின் மாவோய்ச்டு செயலாளர் கங்காதர் தம் இயக்கத்திற்கும் தீ வைப்புக்கும் தொடர்பில்லை என உறுதியாக அறிவித்திருந்தும் காவல்துறை தமது போக்கில் செயல் பட்டுள்ளது.

இதற்குமுன் மாநில உள்துறை அமைச்சகம் பல எழுத்தாளர்கள், அறிவுசீவிகள், கலைஞர்கள், பேராசிரியர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் ஆகியோரை நக்சல்பாரிகள் என்றும், ஆதரவாளர்கள் என்றும் பெரும் பிரச்னையை கிளப்பியுள்ளது.

அதன் பிறகு பல தரப்பிலும் பலத்த எதிர்ப்பு கிளம்பவே, இப்பட்டியல் திருப்பி பெற்றுக்கொண்டது அரசு. எனினும் மாநிலம் தழுவிய அளவில் தனது வேட்டையை காவல் துறை நடத்திக் கொண்டுதான் இருக்கிறது.

No comments: