Thursday, December 13, 2018

நெல் ஜெயராமன்


 சொல் ஜெயராமன்களுக்கிடையில்,
 செயல் ஜெயராமன்.
காணாத ராமனுக்கிடையில்  காணும் ராமன்,
காவிய ராமன் அல்ல காவிரி ராமன்.

மக்களை பிரிப்பவன் இல்லை,
மனங்களை இணைத்தவன்.

பாசாங்கு செய்தவன் அல்ல,
பசி போக்கியவன்

 காணா நெல் ரகங்களை
கண்டு பிடித்தவன்,
கொண்டு சேர்த்தவன்,
கழனியின் மைந்தன்.

நம்மாழ்வார் வரிசையில்
வேளான்மை பலம் சேர்த்தவன்,
187 நெல் ரகங்களை
தொம்பையில் சேர்த்தவன்,
நலம் புதுக்கியவன்.

ஓடியாடி உழைத்து,
ஒப்பு நோக்கி
ஊருக்கு, உலகுக்கு அளித்தவன்,
உழவுக்கு உறுதி சேர்த்தவன்.

அருகியே சென்றிட்ட அரும் பயிர்களை
அரவம் இழந்திட்ட வேளாண்மையை,
மீட்டெடுத்தவன்.

ஒற்றை அணி படையாய், டெல்டாவின்
பண்பை மீட்டவன்.
ஆழ்வார் வரிசையில், நெல்லேருழவராக
நானிலம் உயர,
மாநிலம் காத்தவன்.

நோயுற்ற போதும், நுடங்கிடாமல்
நோக்கம் சேர்த்தவன்,
விட்டுச் செல்லும் பணி
விசனம் தூர்த்தவன்.

No comments: