கவிஞர்.ராபர்ட் லாரன்ஸ் பின்யோன்
உடைவுற்ற ஒரு வீட்டின் நிழலில்,
வெறிச்சோடிய ஒரு தெருவின் கீழ்,
மதிற் சுவர்களில், குளிர்ந்த கரடுமுடான, மறைமுக படிக்கட்டுகளில்,
இறந்த காலங்களின் அமைதியில்.
ஒருவர் கரங்களில் இன்னொருவர் முரட்டுப் பிணைப்பில்
இரு காதலர்கள் சந்திப்பை நான் கண்டேன்.
இதயமற்ற அவ்வீட்டின் மீதில்
மன ஆழத்தில் திகில் எழுந்தது
இழந்த நட்சத்திரங்கள், சிதலம் அடைந்த, பெரு நிலவுகள்,
இவைகளிடையே மேலோங்கிய உலகங்கள்,-
காலத்தின் கல் மாளிகை நொறுங்கி உடைந்தது,
அந்த உடன் முத்தத்தின் முன்.
மொழியாக்கம்
No comments:
Post a Comment