Wednesday, April 11, 2007

எதிர்கொள்...

துன்பம்,
தாங்கிக்கொள்!
"ஏட்டில்",
"பாட்டில்"
என்றாலும்,
எதிர்கொள்.


வாழ்க்கையில்,
அன்றாட,
நிகழ்வுகளில்,
பொறுத்துக்கொள்.
இயல்வது இல்லை!
ஆயினும்,

ஓர் நொடியில்,
ஓராயிரம் உணர்வு,
"வலி மின்னலென"
தோன்றி மறையும்.


பதட்டம், நடுக்கம்,
சமாளித்து,
பழகிக்கொள்!
கொண்டதை விட,
என்ன நிகழும்?


இடுக்கண் தாங்கி
நில்!
இனி என்ன?
எதிர்கொள்!
ஏற்றம் தான்!

No comments: