துன்பம்,
தாங்கிக்கொள்!
"ஏட்டில்",
"பாட்டில்"
என்றாலும்,
எதிர்கொள்.
வாழ்க்கையில்,
அன்றாட,
நிகழ்வுகளில்,
பொறுத்துக்கொள்.
இயல்வது இல்லை!
ஆயினும்,
ஓர் நொடியில்,
ஓராயிரம் உணர்வு,
"வலி மின்னலென"
தோன்றி மறையும்.
பதட்டம், நடுக்கம்,
சமாளித்து,
பழகிக்கொள்!
கொண்டதை விட,
என்ன நிகழும்?
இடுக்கண் தாங்கி
நில்!
இனி என்ன?
எதிர்கொள்!
ஏற்றம் தான்!
No comments:
Post a Comment