Sunday, April 1, 2007

....தானம்!!

இரத்ததானம் செய்யுங்கள்!
அனைவரும்! விருப்பமாக!
வியாபாரம் நுழைவு,
வீதி சரக்கு போல்.


விழாக் கூட்டம் போல்
மொய்க்கும்.
வறுமை மாந்தர்,
எஞ்சிய குருதியும் ஏலம்.


ஏய்ப்புகளின் பிடியில்
இளைஞர்,
வாய்ப்பு இன்றி வாடுகின்றனர்.
வருவாய்த் தேடி.


விற்கிறார் குருதியும்,
உறுப்புகளும்,
தரகர் வழி.
ஏமாற்றம் மிஞ்சுகிறது.


பண்டம் தம்முடையது
ஆயினும்,
எடுக்கும் விலை இல்லை.
கொடுக்கும் விலையே,
கோலோச்சும்.


கொடுமையில்,
மகளிர், இளைஞர்,
அடிப்படை மக்கள்.
வேர்கள்,
வியர்வைகளுடன்.

No comments: