Friday, April 27, 2007

'ஆய்ந்தாய்ந்து'

'ஆய்ந்தாய்ந்து' கொண்டதா? பழக்கம், பெரும்பாலும் நட்பாகி விடுகிறது! அறிந்தவர், தெரிந்தவர், நண்பராகி, நடுவீடு வரை நீண்டுவிடுகிறது. உள்ளதை எல்லாம் கொட்டி, 'உண்மை நண்பர்' என்றாகி விடுகிறது. ஒருவழி போக்கு என்பதும் கூட, நெடுவழி சென்ற பின்பே வெளிச்சம். படித்தவர் என்பவர், பக்குவம் அடைந்தவர்! எதற்கு? யாருக்கு? ஊரில் நடப்பது, உனக்கு என்ன? எனக்கு என்ன கூலி? இலாபம்? நேரம் வீணாகுது, காலம் கடக்குது, இடத்தைப் பிடி! இருக்கும் காலத்தை இழந்தவர்! சுய முயற்சி உடைந்தவர், போனது போகட்டும். என்ன பலன்!

No comments: