Friday, April 13, 2007

முருங்கை...

வெட்டினர்.
கிளைகளும், கீரையும்,
பிஞ்சும், பிளாக்காயும்.
உறுத்தின,கண்களை,
ஓழித்தனர்,
ஒய்யாரமாக.


"வெட்ட வெட்ட
முளைத்தேன்"
மதியைப்போல்,
முளைத்தது,
குழவி எகிறைப்
போல்.


பாதித்த நெஞ்சில்,
பால் வார்த்தது.
பதைத்த நெஞ்சிற்கு,
இதம் அளித்தது.


"ஒரு மாடு,
ஒரு முருங்கை
மரம்",
பொசுப்பு,
ஏற்படித்தியது.

No comments: