Monday, April 23, 2007

சமதர்மவாதி...

சமரசவாதி! சமதர்மவாதி!
'நம் கொள்கைதான்,
அவர்,அங்கேயிருக்கிறார்'
அனைவரையும்,
அரவணைத்துச் செல்கிறார்.


கேட்டதை,
ஏன்? பல சமயங்களில்,
கேட்காததைக் கூட,
நினைத்துப் பார்க்க
முடியாததைக்கூட,


ஆச்சரியத்துடன்,
அகல விழிகளில்,
அகலாத நினைவாக,
ரசிகர் மன்றம்,
தோற்கும் பாணியில்,


பாதையில்,
பதாகைகளில் நடிப்பு,
விஞ்சும்,
வீதிகளில் நாள்தோறும்.
தினசரிகளில்,
அரங்கேற்றம்.


சென்ற பணி,
ஆராதிக்கவா?
ஆமோதிக்கவா?
தன்னை இழந்து,
கொள்கை மறந்து,
மரத்து,


அமைப்பின் ஈர்ப்பில்,
கடைசி வாய்ப்பு,
வாய்ப் பூட்டு,
தாமாக,
பழம் பெருமை,
மக்கள் விளாசுகிறார்...

No comments: