நிரம்பி, நிகரற்று விளங்கிய
எமது கல்லூரி.
கைம்பெண் கோலத்தில்
தனிமையில் வெறுமையாக
சமம் இழந்து.
இளவரசியாக விளங்கியவள் பண்ணை அடிமையாக,
கண்ணீர் கசப்பு கன்னங்களில் வழிந்தோட.
விருப்பாளி எவரும் நிறைவளிக்கவில்லை.
பகைவராக அனைவரும்.
பொலிவிழந்த முகத்துடன்.
செவித்திறன் இழந்து.
வெளுப்பு கண்களை விழுங்கிட
குன்றிய வலிமை தொடைகளில் படர.
ஓ! எம்மை உருவாக்கிய இனிமை நிறை
ஊற்றே
தனிமை, சோர்வு கொள்ளாதே,
மகிழ்நிறை நாட்கள் உம்முன்னே நான் காண்கிறேன்
வலியும் கண்ணீரும் முடிவுறும்.
(சைரா லியோன் நாட்டின்," மாடா ஜோ சாய் ஸ்கொய்ர்", போட்ஸ்வனா நாட்டு பல்கலைக் கழக, இலக்கியக் கல்வித் துறை மாணவர்)
(எமது மொழியாக்க முயற்சி)
No comments:
Post a Comment