Sunday, November 4, 2018

" மவுண்ட் செயின்ட் மிசல்"

07.08.18, காலை 7 மணிக்கு தொடங்கிய பயணம், " மவுண்ட் செயின்ட் மிசல்", நோக்கி.130 கி.மீ. வேகத்தில், பயணக் கட்டண தேசிய நெடுஞ்சாலையில்,விரைவாக. பல ஊர்களைக் கடந்து பக்கவாட்டில்; மர அடர்த்திகள்; சோலைகள்; கோதுமை வயல்கள்; சூர்யகாந்தி விளைச்சல்கள்; சோளப் பயிர்கள்; இவைகளை துரிதமாக கடந்திட, செங்குத்தான சாலைகள்.

ஏற்ற இறக்கங்கள், சில நேர்வுகளில் வளைவுகள்.ஊர்களின் ஊடாக, கிராமங்களைத் தொட்டு, வேகம் குறைத்து, எண்ண வேகத்திற்கு ஈடளிக்க இயலாத விரைவு வாகனங்கள், முறையாக முந்திச் செல்ல, ஒருவாறு சமதளப் பகுதியை தொட்டது எங்கள் வாகனம்.

தொடுவானத்தில், உயர்ந்து நிற்கும் நெடுங்குன்றத்தில், "செயின்ட் மிசல் கோட்டை", கோவில் தென்பட, அனைவருக்கும் உற்சாகம், மகிழ்ச்சி எல்லை கடந்து."யுனஸ்கோ", அங்கீகரிப்பில் வரும், 'மரபுரிமைச் சின்னம்',அது.

வாகன நிறுத்தத்திற்கு அகர வரிசை ஏற்பாட்டில், அடுத்தடுத்து நிறுத்தம்.ஊழியர் ஒழுங்குபடுத்த, எமது வாகனத்தை நிறுத்தி, பார்வையைச் சுழல விட்டோம்.சுள்ளென்ற வெயில், சற்று சுணங்கியது.

அண்மையில், மக்கள் கூட்டம் வண்ண,வண்ண ஆடைகளில். பல நாடுகளிலிருந்து வரிசையாக, ஒழுங்கமைவிற்குள்.இலவயப் பேருந்து நோக்கி, ஒவ்வொன்றாக ஊர்ந்து கொண்டிருந்தது.அவ் வரிசை ஒழுங்கில் எங்களையும் இணைத்துக் கொண்டோம்.

காலை சிற்றுண்டி விடுத்து, ஒன்றிரண்டு பிசுகட் எடுத்துக் கொண்டது போதவில்லை.பசி எடுத்திட, மீண்டும் சில சில்லுகள் கொரித்துக் கொண்டே, மெல்ல,மெல்ல கடந்து வண்டியில் ஏறினோம்.

சொகுசு வாகனம், துப்புரவுடன். இரைச்சல் இல்லாத இனிய ஓட்டம்.செல்லும்பாதை இரு மருங்கிலும், உணவுக் கூடங்கள்,விடுதிகள், 'கேம்ப் ஏற்பாடுகள்', அலங்கரித்திட, சில நூறு மீட்டர் சொகுசு வாகன அனுபவம்.

நெளிந்து செல்லும் பாலத்தை தொட்டு, இருபது நிமிட பயணத்தில், பாலத்தின் கீழே, ஆற்றுப்படுகை. பின்னோட்ட நீர்ப் பகுதி; பின் வாங்கி இருக்க; இரு புறமும் விழிகளைச் சுற்றி; விரிவானம், விசாலக் கோணம் கண்டு; வியந்து , பல மொழி பேசும் மக்கள் உணர்வுகளோடு கரைந்து, என்னை மறந்தேன்!

நிறுத்தம் வந்த போது, தானியக்க கதவுகள் திறந்திட, வரிசையாக இறங்கி,பாலத்தின் நடைபாதையில் பயணப் பட்டோம்.செல்போன்கள் சொடுக்குப் போட, கேமராக்கள் சுழன்று பல காட்சிகளை படத்திற்குள் கவர்ந்திழுத்திட, ஆற்றுப்பகுதியில் இறங்கினோம்.

இடையிடையே சிற்சில பாறைகள், பச்சை படர்ந்து, உலர்ந்தும், உலராமல்,நாங்கள் உட்கார்ந்து, அன்னாந்து பார்த்திடும் கோட்டை!களிப்பு மண் வரி கோடுகள் காய்ந்தும், காயாமல், கவுச்சி வாசம்.

சில் நீர்த்திட்டுகள் எம்மை அழைத்திட, ஆடை சுருட்டி, மூடணி அவிழ்த்து, முட்டி கால் உயர்த்தி நடை பயின்றோம்.சில்லென்ற காற்று, தூய்மையாக, உடலைத் தழுவ, உன்னத உற்சாகம்.மகிழ்ச்சி தாலாட்ட, கடற் காக்கைகள் வியக்கும் ஒலி எழுப்பி, எம்மை நோக்கி தாழப் பறந்து, தளர்நடை பயின்றது.

இரை தேடி, பாறை இடுக்குகளில் இறங்கிய பறவை அச்சம் தவிர்த்து, தாழ்நிலை பறந்திடும் வானூர்தி போல் ஒலி எழுப்பாது ஒய்யாரமாக ஒப்பிலா காட்சி! நண்பகல் கடந்ததும், நினவின்றி.உணவுப் பொட்டலங்கள் வாகனத்தில்.அழைப்பதும், கேட்காமல், ஒருவாறு நிலை உணர்ந்து, மீண்டும் சொகுசுப் பேருந்தில் வரிசை காத்து ஏறினோம்.இலக்கு சென்றதும், இறங்கி, காரில் அமர்ந்து, சாப்பிட முனைந்தபோது, மழைத்துளிகள் நனைத்திட, உள்ளிழுத்து அமர்ந்து, எலுமிச்சை சோறு, உருளை கலந்து, பிசைந்து, உடன் வந்த விருந்து அளித்திட்ட உணவும் சேர்த்து, மதிய உணவு முடிந்தது.

அடுத்த கட்ட பயணத்திற்கு அணியமானோம்! இலவச சொகுசு வாகனம் மீண்டும் ஈர்த்திட, ஏக்கத்துடன் பின் நின்ற வளமான கறுப்பு நிறக் குதிரைகள் பூட்டிய பழமை வாகனத்திற்கு கட்டணம் செலுத்த இயலாது, பயணம் நீண்டது.

மலைப்பாக செம்மாந்து நின்ற மலை நுழைவாயிலில் காலடி எடுத்து வைத்திட தயாரானோம். அதற்கு முன், பின் வாங்கியிருந்த ஆற்று நீர் ஓட்டம், சீராக தன் பாதையில் முன்னேறிக் கொண்டிருந்தது.இயற்கை நீர் ஊட்ட சூழல் கண்டு களித்தோம்.மலைக்கோட்டை வலப்பக்கத்தில், வளைந்து, நெளிந்து செல்லும் படிக்கட்டுகளில் ஏறுவது எவ்வாறு என்ற திகைப்பும்; எப்படியாவது ஏறிட வேண்டும் என்கின்ற உந்தமும் போட்டியிட; கால்கள் முன்னேற சாய்தள பாதையில் சறுக்கு மரம் ஏறுவதுபோல்.இரு பக்கங்களிலும் எண்ணற்ற கடைகள்; அங்காடிகள்;உணவகங்கள்; வணிகம் செய்திட திருவிழாக் கூட்டம் போல் ஏறுவதும், இறங்குவதுமாக.சில தொலைவு கடந்து, ஆசுவாசப்படுத்தி, மகளுடன், ஊன்றுகோல்போல் குடை துணை நிற்க.

எனக்கு முன்னே, மனைவி உற்சாகமாக படிக்கட்டுகளில் முன்னேறி, திரும்பி என்னைத் தேட. படப்பிடிப்பில், கவனத்துடன் எம்மையும் கண்காணித்து பாலா, அப்படியும் இப்படியுமாக சுழல, மச்சியின் உச்சியை அடைவதுபோல்.இடையிடையே உள்ள கோட்டை சந்துகளை, பொந்துகளை கண்டு, அவற்றிடையே காப்பாக பராமரிக்கப்படும் மரங்களை, செடிகளைக் கண்டு, உள்வாங்கிட முடியாத திணறல் காட்சிகள் பதிவேற்றத்துடன்.

மலைக்கோட்டை இடது பக்கமும் நீர் சூழ்ந்து கொண்டிருந்தது.காலையில், ஓடியாடி உட்கார்ந்து களித்து பகுதி, ஆற்று நீர் படர்ந்து சூழ்ந்திருந்தது.நேரம் சென்றிட, மலையை வளைத்திடும் நீர்ச் சூழல். ஒரு நாளைக்கு இருமுறை உள் வாங்குவதும், வெளிப்படுவதும், இயற்கைச் சூழல் கண்டிட, ஆர்வத்துடன் மக்கள் கூட்டம், நாங்கள் நற்பேறு பெற்றோம்."யுனஸ்கோ" மரபு பட்டியலில் இடம் பெற்ற சிறப்புக் காட்சியை கண்டு உற்சாகம்.சலிக்க கண்டு களித்த பெருமை வருட இறங்கினோம்.

எம்மை வரவேற்கும் உற்சாக உணர்வோ! அறியேன்! காற்று சுழன்றது, உடன் மணல் பறந்தது.சுழற்சியில் முகத்தில் அப்பிட, கோட்டை மதில் பக்கமாக, கண்ணாடி அணிந்து, திரும்பி நின்ற கூட்டம் அதிகரித்திட,வானம் கருத்தது.

வண்டின நிறம் சேர்த்து, கும்மிருட்டு மழை மேகம், குளிர்ந்த காற்று, சூறைக்காற்று சுழன்றடிக்க, விசை வேகம் சுருதிசேர்த்திட எம்மை நெட்டித் தள்ள, கைகள் கோர்த்து, ஒருவருகொருவர் ஒத்தாசை சேர்த்து, பாலத்தைவிட்டு தூக்கி எறியப்படுவோமோ, பயம் சேர்த்து, பெரும்பாலான மக்கள் கூட்டம் நடைகூட்டியது.

 விரைந்து முண்டியடித்து, பேருந்தில் ஏறி இடம் சார்ந்திட முண்டியடுத்தும், ஒழுங்கிழக்காமல், வெளிறிய முகத்துடன்.மழைத்துளிகள், ஆலங்கட்டித் துளிகளுடன் கொட்டிட, எம்மீது அங்கி போர்த்தி, குடை பிடுத்து காத்திட்டனர் பிள்ளைகள்.

பனி மழைத்துளிகள் பஞ்சு நிறத்தில், சில்லென்று உடைந்த கண்ணாடித் திவளைகளாக, சில மணித்துளிகள் நீடித்தது. செய்வதறியாது, திகைத்து வண்டியில் ஏறிட, ஒன்றிரண்டு வண்டிகள் விரைந்திட, காவல்துறை, இராணுவம் வண்டிகளில் விரைந்திட, மேலும் இலவசப் பேருந்துகள் பணியில்.

நெருக்கி வண்டியில் ஒழுங்காக உள் ஏறி நின்றோம். ஒரு வழியாக.
அலறிய பத்மினியும், வெளிறிய முகம் இயல் நிலைக்குத் திரும்ப முயன்று கொண்டிருந்தது.

அச்சம் எமக்கில்லை என்று சொல்ல முடியாது.இருப்பினும், நம்பிக்கை மேலோங்கிட, பயணம் தொடர்ந்தது.தருணங்கள் கரைந்திட, புயல் திசை மாறியது.வானம் மேற்றிசையில் வெளுக்கத் தொடங்கியது. வண்டி நிறுத்தம் நோக்கி, மனதில் அசை போட்டு,

 'அச்சமில்லை! அச்சமில்லை!

No comments: