Monday, November 12, 2018

வேனிற்காலம்





காத்திருக்கிறோம் நாங்கள்.
நீங்கள் இங்கே,
எம்மை உயிர்ப்புடன் வைத்திட,
கொடுங் குளிர்கால கொடுமையிலிருந்து.
பறவைகள் மீண்டன.
நடவடிக்கைகள் உயிர்ப்புடன்.
அவரவர் ஆர்வக் கிளர்ச்சியில் விளையாட்டு.
ஆம்! கோடை மீண்டும் வருகை.
ஆயினும், எமது சிந்தனைகள் அலைகளாக.
மழை ஏன்?
எமது வகுப்பறை தவிர்த்திட.
நடவடிக்கைகள் விலக்கி.

உம்மை புரிந்து கொள்ள எம்மால் இயலவில்லை.
நீ கோடைக் காலமா?
கோடை மழை என்று விளிக்கலாமா?
தயை செய்! தயை செய்!  விடை சொல் .

*சொந்த நாடான சியோரா லியோனிலிருந்து, போட்ஸ்வானாவிற்கு புலம் பெயர்ந்து, கவிஞர்.மாட ஜோ சாய் ஸ்கொய்ர், வேனிற்கால அனுபவத்தை, தனது நாட்டு பருவ நிலையோடு, ஒப்பிட்டு எழுதியது.

(எமது மொழியாக்க முயற்சியில்)

No comments: