Saturday, November 10, 2018

ஒரு கன்னியின் அறிவுரை


எச்சரிக்கை, ஓ ஏந்திழையே
தேசத்தின் பெருமை நீ
குதறும் ஓநாய்கள் குதூகல உணர்ச்சியில்
உம்மை மலிவாக எண்ணும்
அவர் பசப்பு வார்த்தைகளை செவி மடுக்காதே
பொய்யுறுதிகளை ஏற்காதே
வழுக்கு விலாங்கு அவை
நல்லுணர்வில் தேர்வு செய்
உள்ள வெளிப்பாட்டில் அவரை ஆய்ந்து கொள்
உள்ளடக்கத்தை முகத்தில் வாசிக்க இயலாது
ஒளிந்திருக்கும் ஏமாற்று, எச்சரிக்கையாய் ஓ,
இம் மண்ணின் மகளே
பணி அனைத்தையும் பரிசீலனை செய்திடு
வார்த்தைகளை அல்ல
வீழும் உடல் ஒவ்வொன்றையும் தேடிடு
நீண்ட கூரிய பற்களின் பதிவுகளைத் தேடி
அவை கண்டபின் உண்மையாயிரு
மிதக்கும் காற்று கனவுகளை நீக்கிடு
காற்றாடியாய் பறந்திடு, உண்மையில்
அன்பு காலப் போக்கில் வளர்ந்திடும்.

(கவிஞர்.மாடா ஜோ ஜாய் ஸ்கொயர். 8, மார்ச், 2003ல் உலக மகளிர் நாளையொட்டி, சியாரா லியோன் பல்கலைக் கழக மாணவிகளுக்காக அளிக்கப்பட்ட கவிதை.மொழி பெயர்ப்பில்.)

No comments: