Thursday, March 1, 2018

வேள்வியில் பயணம்

துயிலெழும்போது துலங்கிய எண்ணம், கிளர்ந்த சிந்தனை, திரண்ட கருத்துகள் வடித்திட ஏடெடுத்தபோது வசப்படாத மாயம்! பல தருணங்களில் மனத்தின் கண்ணாமூச்சி!
 சுற்றி எழும் சத்தம், சந்தடி, வந்த அடி தெரியாமல் திசைமாறிடும். திடம் குறைந்து.தங்காத நினவு குறித்து தவித்த கணம்,காலம் கடந்தும் தயாரிப்பிற்குள் வராது.
பலமுறை,இது போன்ற நிகழ்வுகள் நீளும்.  உள்ள வாரியின் ஓயா இரைச்சல், அலைக்கழிப்பில், உற்சாகம் உலர்த்தி.

எண்ணுவது ஏராளம்
எழுதுவது?

முடங்கிய செயல்முணு முணுப்புடன்
மூண்டிடும் துயரம்,
முக்கல் முணகலுடன்.

வேண்டிடும் அமைதி.
நீண்டிட
வேள்வியில் பயணம்.

வேதனை தீர்க்க!
சாதனை சேர்க்க!

No comments: