மாண்டிடும் மனிதத்தின் சாட்சி
மாநிலந்தோறும்.
உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், அரியாணா..............
குழந்தைப் பருவ, குமரப் பருவ
பெண்கள்,
சாதிய வெறிநாய்களின்,
சனாதனப் பசியில்,
அடுத்தடுத்து அடுக்கடுக்காய்
அக்கிரமம்.
வக்கிர வெறியில்
தலித் பெண்கள் கற்பழிப்பு,
உடல் சிதைப்பு,
பிணந்தழீயும் நடத்திய
நவீன நம்பூதிரிகளாக.
அரியாணா அக்கிரமம் வக்கிரமத்தின் உச்சம்.பதின் பருவ தலித் பெண் சிதைந்த உடல், 'சிந்த்' மாவட்ட கால்வாய்க் கரையில். கூட்டாக கற்பழிக்கப்பட்டு,உடல் சிதைக்கப்பட்டு, பிறப்புறுப்பில் பொருட்கள் திணிக்கப்பட்டு வன்மம்.பானிபட் மாவட்டத்தில் தலித் பெண் குழந்தை அண்டை அயலவரால் பலாத்காரம் செய்யப்பட்டு பிணந்தழீ நிகழ்த்தப்பட்டுள்ளது.அறிவிப்புகள் ஆயிரம் வந்தாலும் சாதிய வெறி, அணி திரட்சி அக்கிரம் எல்லைகளைக் கடந்து,மாநிலங்களைத் தாண்டி,
நீண்டிடும் "தலித் நிர்பயா". மாண்டிடும் மனிதத்தின் காட்சி!
வெட்கப்பட வேண்டும்!
வளர்ச்சியும்! முன்னேற்றமும்!
No comments:
Post a Comment