Thursday, March 1, 2018

தனி நாட்டம்

தனி மனித விருப்ப விசையில் விரைந்திடும் மனிதன். தான் சர்ந்துள்ள குடும்பம், உறவுகள் தொலைத்திடும் மனிதன். தனி நலம் ஒன்றே உயர் நலமாக, உணர்வேற்றி  ஒட்டறுத்து ஒதுங்கும் போக்கு கூடுதலாகிடும் காலம் இது.

 என் நிம்மதி முந்துரிமை.இதற்கு தடையாக, குறுக்கீடாக நிற்கும் எவையும் ஏற்பில்லை.என்னை விட்டு விடுங்கள், எட்டிச் செல்கிறேன் என்கின்ற மனப்பான்மை கூடுதலாகி, கூட்டம் கலைந்து, தனி நாட்டம் அதிகரிக்கும்.

 தந்தை இல்லை! தாய் இல்லை! மனைவி இல்லை! குழந்தை இல்லை!.விட்டு விடுங்கள் எனக் கட்டறுத்துச் சென்றிடும் காலம்.பசையுணர்வு காய்ந்து, நசை உணர்வு நழுவி ஒதுங்கிடும் உள்ளம்.

 வளர்த்தது சரியா? வளர்ந்தது சரியில்லையா? கூடுதலாகும் விசாரணை! மனக் குளத்தில் நீண்டிடும் குமிழ் வளையங்கள் போல்.விடை காணும் நடை வீரியமாக. கரைந்திடும் பொழுது காலச் சக்கரத்தில்.

No comments: