Saturday, March 24, 2018

பின்னணி என்ன?

புதுச்சேரியில் கம்பி வட சேவை (கேபிள் தொலைக்காட்சி) வழங்கும் நிறுவனங்கள் சந்தாவாக உருவா.100 வீதம் வாடிகையாளர் வசம் வசூலித்து வருவதாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் செய்தி பத்திரிக்கையில் வெளியிடப் பட்டிருந்தது.மேலும், கம்பி வட சேவை அமைப்புகள் சந்தா தொகையை-கட்டணத்தை- உயர்த்த அனுமதி கேட்டிருந்ததாக அதற்கு அரசாங்கம் மறுத்து விட்டதாகவும் தகவல் வெளியிடப்பட்டது.

இதில், ஒரு உண்மை யாதெனில், ஒவ்வொரு வாடிக்கையாளர் வசமும் சந்தா தொகையாக, மாதம் ஒன்றுக்கு உருவா.200 வீதம் வசூல் செய்யும் போது, உருவா.100 வசூல் செய்வதாக தவறான தகவல் அளிக்கப்பட்டது.அது மட்டுமின்றி, இணைப்புகளின் எண்ணிக்கையும் குறைத்து காண்பிக்கப்படுகிறது.

பெரும்பாலும், கம்பிவட சேவை நிறுவனங்கள் அரசியல்வாதிகளால் அல்லது அரசியல் அதிகாரத்திற்கு மிகுந்த நெருக்கம் உள்ளவர்களால் நடத்தப்படுவதால் இதுபோன்ற, முறைகேடுகள் துணிவாக நடைபெறுகின்றன.

நகராட்சிகளும், கொம்யூன் பஞ்சாயத்துகளும் 10% விழுக்காடு, "கேளிக்கை வரி", அவரவர் அளிக்கும் கேபிள் இணைப்புக் கணக்கை சரியானதாக எடுத்துக் கொண்டு, சோதனை ஏதும் செய்திடாமல்,மிகக் குறைவாகவே வசூல் செய்கின்றன.

திரைப்படங்களைப் பொறுத்தவரையில், டிக்கெட் முத்திரை இடுவது, சோதனை செய்து, சரியான எண்ணிக்கையை, காட்சிகளின் அடிப்படையில் இறுதி செய்து," கேளிக்கை வரி" வசூல் செய்திடும் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துக்கள், கம்பி வட சேவையில் அரசாங்கத்திற்கு வெகு காலமாக வரி இழப்பை பல இலட்சங்களில் அல்லது கோடிக்கணக்கில் ஏற்படுத்தியுள்ளன.

 மேலும், சினிமா திரையரங்குகளை வரி பாக்கிக்காக சீல் வைத்திடும் அதிகாரம், கேபிள் தொலைக்காடசி ஒலிபரப்பு நிறுவனங்களிடம் தயக்கம் காட்டுவதின் பின்னணி என்ன?

No comments: