Thursday, March 15, 2018

புறக்கணிப்பு

இன்று, உலக நுகர்வோர் நாள்(15.03.2018). புதுச்சேரி அரசு மாநில நுகர்வோர் பாதுகாப்புக் குழுவை அமைத்திடாமல், 15 ஆண்டுகளுக்கு மேலாக இழுத்தடிப்பு செய்து, நுகர்வோர் நலனில் அக்கறையற்று வாளாவிருக்கிறது.


இச்செயலை கண்டிக்கும் வகையில், புதுச்சேரி நுகர்வோர் அமைப்புகளின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில், புதுச்சேரி, தலைமை அஞ்சலகம் முன்பாக, உலக நுகர்வோர் நாள் புறக்கணிப்பு கண்டன ஆர்ப்பாட்டம், காலை 10 மணி அளவில் நடைபெற்றது.

நிகழ்வில், பல்வேறு பொதுநல அமைப்புத் தலைவர்கள் மற்றும் நுகர்வோர் அமைப்புத் தலைவர்கள் கண்டன உரை நிகழ்த்தினர்.

No comments: