(நாளுக்கு நாள் வரிச் சுமையேற்றும் அரசாங்கம் குறித்து நண்பர் ஒருவர் இப்படி கூறினார்)
வரி வரியாய்ப் போடறான்,
வாய் கிழியப் பேசறான்.
வளங்கள் யாவும் தீர்க்கறான்,
வடிகட்டி கசடு அளிக்கிறான்.
மடைமாற்ற அரசியல் வைக்கிறான்,
மாட்டிக்கிட்டு நம்ம ஆளு
தவிக்கிறான்;
மரியாதை அடகு வைக்கிறான்.
மனங்களில் மதத்தை ஏற்றுகிறான்.
ஒளிப்பிழம்பை ஒதுக்கி
உணர்ச்சி வெறி சேர்க்கிறான்;
ஓயாது வீண் வேலை பார்க்கிறான்.
ஒய்யார பிரித்தானிய கலை தூக்கறான்.
பேச்சுக்கு வரி விதித்து
மூச்சுக்கும் வரி விதிப்பான்,
முடிச்சுக்கும்.
வேரறுக்கும் பெரு வணிகம்
நொடியில்,
வேண்டுதல் வேள்வியில்
மொட்டை அடிக்கும்.
பலி பீடத்தில் மக்கள்,
பறிபோகும் பாகங்கள்
நுட்பமாய்.
பன்னாட்டு முதலாளியம்!
பழுத்த வேலைக்காரன்!!
வரி வரியாய்ப் போடறான்,
வாய் கிழியப் பேசறான்.
வளங்கள் யாவும் தீர்க்கறான்,
வடிகட்டி கசடு அளிக்கிறான்.
மடைமாற்ற அரசியல் வைக்கிறான்,
மாட்டிக்கிட்டு நம்ம ஆளு
தவிக்கிறான்;
மரியாதை அடகு வைக்கிறான்.
மனங்களில் மதத்தை ஏற்றுகிறான்.
ஒளிப்பிழம்பை ஒதுக்கி
உணர்ச்சி வெறி சேர்க்கிறான்;
ஓயாது வீண் வேலை பார்க்கிறான்.
ஒய்யார பிரித்தானிய கலை தூக்கறான்.
பேச்சுக்கு வரி விதித்து
மூச்சுக்கும் வரி விதிப்பான்,
முடிச்சுக்கும்.
வேரறுக்கும் பெரு வணிகம்
நொடியில்,
வேண்டுதல் வேள்வியில்
மொட்டை அடிக்கும்.
பலி பீடத்தில் மக்கள்,
பறிபோகும் பாகங்கள்
நுட்பமாய்.
பன்னாட்டு முதலாளியம்!
பழுத்த வேலைக்காரன்!!
No comments:
Post a Comment