ஓங்கி ஒலித்திடும் ஓசை கேட்டு
இறங்கி வந்தேன்,
ஊர்வலம் காண,
முகமெங்கும் வண்ணம் பூசி,
டப்பாங்குத்து ஆட்டம் போட்டு,
தனை மறந்து, விசிலடித்து
ஆடும், இளைஞர் கூட்டம்
முன் வர,
செய்யிழை மேளங்கள் பெரிதும், சிறிதுமாக
பேரிரைச்சல் போட்டு
பின்வரும் உருவங்கள்,
கலாச்சார வடிவம் காட்டி,
'முன்னாளில் இப்படியெல்லாம் இல்லை'
சாவுக்கு அடிக்கும் மேளம், ஆட்டம்,
சாமிக்கு அடிக்கிறார்கள்,
இப்போதெல்லாம்?
பேசிக்கொண்டே சென்றார்.
ஒரு சிலர், ஓரமாக!
No comments:
Post a Comment