Saturday, March 17, 2007

சிலையும்,குழந்தையும்!

பால் குடிக்கிறது சிலைகள்!
பால் ஊட்டுபவர் கூறுகிறார்!
ஊடக காட்சி!
ஊர் எங்கும்!


இம்முறை, சிவபெருமான்! அம்மை!
பத்தாண்டு பரபரப்பு!
பால் விநியோக தட்டுப்பாடு!
மீண்டும் அரங்கேற்றம்,
மகாராட்டிரத்தில்!


குடிக்கும் குழந்தைகள்,
நொடிக்கின்றனர்,
பால் இன்றி!
பசும்பாலும் இல்லை!
தாய்ப்பாலும் இல்லை!


பிள்ளைகள் கல்லாக அமையவில்லை!
இருந்திருந்தால்,
பல்லானோர் பாக்கியம் கிடைத்திருக்கும்,
பால் ஊட்ட!


பகுத்தறிவுக்கும் வேலை இல்லை!
பச்சிளங் குழந்தைகள்,
பசித் தீயும் ஆறவில்லை!
பாரதத்தில்!!

No comments: