Friday, March 30, 2007

.....கைபேசியடா

கடற்கரையில் நடக்கிறார் காலாற,
கவலைகள் சுமந்து.
காதில் பேசி,
'கல கல'வென்று ரீங்காரம்.
அடுத்தவருக்கும் ஒலிபரப்பு,
செய்தி வாசிப்பு.


எவர் கையிலும், மெய்யிலும்,
கை பேசி.
கழிவறையிலும்,
கட்டில் அறையிலும்,
உண்ணும் போதும்,
ஓயும் போதும்,
ஓயாமல் பேச்சு.


ஓர் நொடியும் வீணாகாமல்,
ஒன்றிரண்டு கருவிகள்,
உள் பையில்,
வெவ்வேறு வடிவங்களில்.
பேச்சாளர்கள் நாம்!


கருவுற்றிருக்கும் தாயானாலும்,
கையில் பேசி,
உள்ளிருக்கும் குழவிக்கும்,
ஒலியுணர்வு அளிக்கிறாள்!


"ஒலியல்" இல்லை, ஆயினும்,
ஓராயிரம் செய்திகள்,
பரிவர்த்தனை,
தகவல் தொடர்பு,
"எங்கெங்கு காணிணும்" கைபேசியடா!

No comments: