Saturday, March 10, 2007

"கோவா"

குடி தண்ணீருக்கும் வழியில்லை,
"கோவாவில்"
கொண்டாட்டம் குறைவில்லை!
மது தண்ணீருக்கும், மங்கையருக்கும்!
"சுற்றுலா தலம்" பெருமை! பேயாட்டம்!


உவர்ப்பு நீரே ஊருக்குள் ஊடுருவி நிற்க,
காலனியாதிக்க காலத்தில் கூட,
தண்ணீர் நிரப்ப "அகுவாடா" அரண்,
வீரர்களுக்கு அகழி தண்ணீர்,
பாதுகாத்து அளித்த,
போர்த்துகீசிய பெருமையும்,
வற்றி நிற்கிறது,வக்கில்லாமல்!


முந்திரி காடுகள் முடமாகி,
விடுதிகள், கேளிக்கை அரங்குகள்,
சிமெண்ட் தொழிற்சாலை போன்ற
பல தொழிற்சலைகள்,
ஊருக்கு பொருத்தமில்லாது,
உறுதியாய் நிற்கின்றன!


மீன் பிடித்தொழிலும் வளமில்லாமல்,
வணிகமயமாக்கலில்,
விட்டில் பூச்சி வாழ்க்கை,
வனச்செல்வங்கள் சுரண்டல்,
தினம், தினம், தீர்க்கமாக!


இரும்பு,மாங்கனிசு,தாதுக்கள்
இங்கிருந்து ஆசுத்திரேலியாவிற்கு,
வளர்ச்சி, முன்னேற்றம் கருதி,


ஆயிரக்கணக்கில் டிப்பர் லாரிகள்,
சாலைகளை மிதித்து,துவைத்து,
சாரை, சாரையாய் விரைகின்றன,
தொழில், வியாபார முன்னேற்றம்.


வன விலங்குகள்,சூழல் தொடர்ச்சி,
பன்முக வளர்ச்சி,
வரலாற்று ஏடுகளிலே
படிப்பதற்கு அணியமாய்!


கலாச்சார அபிவிருத்தி,
விபச்சார வேள்வியில்,
அனைத்து மாநிலங்களும்,
போட்டி போட்டு,
ஒருமைப்பாட்டு கீதம்,
குறுக்கெழுத்து கொலு,


கொண்டாட்டத்தில் குறைவில்லை!!

No comments: