Tuesday, March 27, 2007

அரங்கேறிய அந்த நாள்!!

உழுவார் உலகத்தார்க்கு ஆணி!
கழன்று,கடை நிலையில் உள்ளார்,
தமிழகத்தில்!


பருவ மழை பொய்த்தால்!
பழி போடுகிறார்,
இயற்கையின் மீது!


பருவமழை பெய்யும் போது,
சேமித்து வைக்க,தேக்கி வைக்க,
தடுத்தது யார்!
அணைகளையும் தாண்டி,
அணை போடுவது யார்!


சர்க்கரைப் பொங்கலுடன்,
மதிய உணவு!
கண்ணிய மிக்க,
நடவடிக்கைதானா?


புண்ணுக்கு பூச்சு,
தீர்வாகுமா?
புண்ணியர்களே!
சுயமரியாதை
வழித் தோன்றல்களே!


ஆண்டபோதும்,
ஆள்கின்ற போதும்,
கவர்ச்சி அறிவிப்புகள்!
யாசகம் பெறுபவர்களாக,
தமிழர்கள்,
மாநிலம் எங்கும்.


தன்மான எழுச்சி பெற்று,
தமிழர் எழுந்தால்,
வேலையேதும் இல்லை,
உங்களுக்கு.

No comments: