உள்ளூர் பெருமை அறியாமல்,
ஊட்டியின் பெருமை பேசுகிறோம்!
மார்கழியின் மகிமை புரியாமல்,
ஊர்களின் உன்னதம் பேசுகிறோம்!
சில்லென்று காற்று,
பனி மூட்டம்,
கதிரவன் தாமதம்,
டில்லியில் மட்டும் இல்லை!
புதுவையிலும் உண்டு.
அனுபவிக்க மனமிருந்தால்,
அமைதி இருந்தால்,
ஆயிரம் உண்டு,
இங்கேயும்,
அழகின் சிரிப்பு.
1 comment:
புதுவை மண்ணின் சுகம்-சுதந்திரம்-நேசம்-எந்த ஒரு மண்ணுக்கும் இல்லை.
லட்ச லட்சமாய் அயல்நாட்டில் போய்
சம்பாதிப்பவர்களும்-கடைசியில்,
புதுவையைத் தான் தஞ்சமடைகிறார்கள்
-நிம்மதியைத் தேடி.
புதுவை ராஜா சிவா
Post a Comment